Monday 20 January 2014

கலைந்ததென் கனவுகள்..!

நிழல்படகின்
நீண்டதொரு பயணம்,
பனிக்காற்றை சுவாசித்து,
பெரும் அலையை தாண்டி, 
நிலவொளியில்
நினைவுத் துடுப்புகளை
வேகமாய் துழாவி,
எக்கரையும் நாடாமல்
இனியதொரு பயணம்.

அன்பு மழைத்தூரல்
ஆர்ப்பரிக்கும் புயல் காற்றாய் மாறி
அலை அடுக்கடுக்காய் உயர்ந்து
துடுப்புகளை பறித்தெடுக்க
நம்பிக்கை நங்கூரம் வீச,
நிலம் தேடி,
கரை நாடி,
கலைந்ததென் கனவுகள்..!

No comments:

Post a Comment