ஓரமாய் நின்று
ஊளையிட்டு அழும்
நாயறியறியுமோ அவளின் வலி?
அக்கினி முன் கைபிடித்து
வாழ்வினில் நுழைந்தவனின்
அன்பை கொண்டுபோன
அகால மரணத்தின்
உயிரருக்கும் வலி,
உடலுடன் மட்டுமல்ல,
உயிருடனும் கலந்தவன்,
நிதானித்த பொழுதுகளில்
அன்புச்சோறிட்டு
அருசுவையாய் பரிமாறி,
இறக்கையற்ற பட்டாம்பூச்சியாய்
உள்ளம் முழுதும் பறந்தவன்.
மூச்சின்றி கிடந்த பொழுதின்
உளம் நொறுக்கும் வலி!
விஷமென்று அறிந்தும்
வேளைதவறாமல் பருகி,
சிறிதுசிறிதாய் உயிர் துறந்து,
அவளையும் துறந்து
வானுலகம் புக்கான்
வழிகண்டு கொண்டவனின்
வழித்துணையாய் வந்தவளின்
விழிகளில் வெள்ளப்பெருக்கின்
ஓசையெழுப்பும் வலி!
நம் தேசமெங்கும்
இதுபோன்று
வாழ்விலே கனல் சுமந்து,
விழிகளிலே நீர் பெருக,
துடித்து சிதறும் சிதிலங்களின்
காண மனமருக்கும் அவலங்கள் எழுப்பும்,
சமுதாய சீர்கேட்டின்
நாணித் தரை சிதறும்
வெட்கக் கேட்டின் விசும்பல் ஒலி!
No comments:
Post a Comment