Saturday 11 January 2014

பலகை

நமதெழுத்துப் பலகையில்
சிதறிய வண்ணங்களை
குழைத்து மெழுகிட
சிறந்ததோர் ஓவியம்
விழித்திடலாக,
கண்டவர் மெச்சினர்,
கரியதோர் பலகையில்
புதிய வண்ணக் கலவையை..

மகிழ்கிறாய் நீயதன்
கருப்பொருளென்று,
மருள்கிறாய் பிறரதை
அறியிலையென்று,
சிரிக்கிறாய் பலகை மேல்
உயர்வதைக் கண்டு,
சினக்கிறாய் உனக்கதில்
இடமிலையென்று.

நீயிலா பலகையில்
நிஜமில்லையடி,
நீண்டுவா, எனை மீண்டும்
தீண்டு வா!
சுழண்டு சிதறும் கலவையில் புது
சரித்திரங்கள் உயிர்பெறட்டும்!

No comments:

Post a Comment