Monday 20 January 2014

இனிய உழவர்தின வாழ்த்துக்கள்!

வாழ்வியல் தர்க்கமில்லை,
வாழ்க்கையை குறித்த தேடலுமில்லை.
நட்பினை ஆழ சுவாசிப்பதில்லை,
உறவுகளோ தினம் தரும் தொல்லை,
அவமானத்தை சாடுவதில்லை,
அதன்மீதே தான் வசிக்கும் நிலை,
தன்சுகம் கண்டதில்லை,
தன்குடும்பத்தின் சுகமே எல்லை.
உழைத்துழைத்து,
உறிஞ்சப்பட்டு,
இறுதி சொட்டையும்
இழக்கும் உழவனை
எட்டும் ஒரே சுகம்,
பேரக்குழந்தையின் முத்தமும்,
நாள்தோரும் கிடக்கும் தீர்த்தமுமே!
தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் மட்டுமே நோக்கும்
புண்ணிய பெரு வாழ்வு வாழும்
உழைக்கும் தொழமைகளுக்கு,
மாற்றங்கள் நிகழ்ந்து,
மகிழ்ச்சிக் கடலில் நீந்திட
இன்னாளிலொரு தொடக்கம்
நிகழுமென ஏக்கத்துடன்,
இனிய உழவர்தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment