Monday 20 January 2014

நீயாய் நான்

மின்னல் கீற்றாய் நிலவொளி
சாளரத்துளையில் ஒழுகும் நேரம்,
மடி சாய்ந்த
மலர் முகமேந்தி,
என்னிடமின்னும் 
என்ன எதிர்பார்க்கிறாயென்றேன்.

உன்னைத்தானென்றாள்.
உன்னிடமென்னை
தொலைத்தவனன்றோ நான்?
விரல் பிடித்து
கடித்தபடி கேட்டாள்,
மிச்சமாயேதும்
உண்டோவென
தேடுகிறேன்.

உடலன்றி வேறேதும்
எனதில்லை எனதுயிரே!
முதல்முறை சந்திப்பில்
முழுதாயிழந்தவன்.

உலகிற்கு நான் நானாய்,
உண்மையில் நீ நானாய்,
உயிருடன் பேசு,
உண்மை உணர்வாய்.

நீயில்லா பொழுதென்று
நானெதையும் உணர்ந்ததில்லை.
நீயாய் நான் வாழ்வதால்,

கவிதையின் வரிகளில் துளிர்ப்பது
காதலின் மிச்சம்,
கண்களில் தெரிவதே
காதலின் உச்சம்.
கண்ணை பாரென்றேன்.
கவ்விக்கொண்டாளென்னை.
கவிதை முற்றும்!

No comments:

Post a Comment