Monday 27 January 2014

தேநீர்



அதிகாலை குளிர் நீங்க
வாழ்க்கை அடுப்பினில் வைத்த
கொதித்த நிகழ்வுப் பாலில்
திடமான தேயிலை சாறு கலந்து
எதிர்மறை கோணங்களை
கவனமாய் வடிகட்டி
கவித்தேன் சிறிது கலந்து
பருக நீ தந்தாய்,
பாங்காயெனக்கு,
சுவைத்திட
மனம் சுறுசுறுப்பானது…!

No comments:

Post a Comment