பிரம்மன் நெட்டுயிர்த்தான்,
புதியதோர்
பட்டுச் சிலையொன்றை
பூமிக்கு பரிசளித்துவிட்டு,
அம்மையப்பனின்
உயிர்கலவையாய்,
அகமும், புறமும்
அப்பழுக்கற்ற தூய்மையாய்,
பிறந்த நொடிமுதல்
பாசத்தின் பிணைக் கைதியாய்..
மொக்கு மொட்டாகி,
மலராகுமுன்,
வாழ்வின் கற்றல்களில்
பள்ளிப்பாடங்களின்
பிணைக் கைதியாய்..
மலர்ந்து மணம் வீசும்
வண்ணப் பொழுதுகளில்
எண்ணச்சிறைகளின்
பிணைக் கைதியாய்..
பூத்தும் காய்த்தும்,
கனிந்த பொழுதுகளில்
விதை காத்து
விருப்பங்கள் தொலைத்த
வாழ்வின் பிணைக் கைதியாய்..
வாழ்ந்த பொழுதெல்லாம்
வாழ்வின் பிணைக் கைதியாய்
வாழாமல் ஏங்கி தவிக்கும்
பட்டுச் சிலையொன்றை
படைத்துவிட்டு
பிரமன் நெட்டுயிர்த்தான்..!
புதியதோர்
பட்டுச் சிலையொன்றை
பூமிக்கு பரிசளித்துவிட்டு,
அம்மையப்பனின்
உயிர்கலவையாய்,
அகமும், புறமும்
அப்பழுக்கற்ற தூய்மையாய்,
பிறந்த நொடிமுதல்
பாசத்தின் பிணைக் கைதியாய்..
மொக்கு மொட்டாகி,
மலராகுமுன்,
வாழ்வின் கற்றல்களில்
பள்ளிப்பாடங்களின்
பிணைக் கைதியாய்..
மலர்ந்து மணம் வீசும்
வண்ணப் பொழுதுகளில்
எண்ணச்சிறைகளின்
பிணைக் கைதியாய்..
பூத்தும் காய்த்தும்,
கனிந்த பொழுதுகளில்
விதை காத்து
விருப்பங்கள் தொலைத்த
வாழ்வின் பிணைக் கைதியாய்..
வாழ்ந்த பொழுதெல்லாம்
வாழ்வின் பிணைக் கைதியாய்
வாழாமல் ஏங்கி தவிக்கும்
பட்டுச் சிலையொன்றை
படைத்துவிட்டு
பிரமன் நெட்டுயிர்த்தான்..!
No comments:
Post a Comment