Sunday 5 January 2014

காத்திருந்த நொடிகள்

காத்திருந்த நொடிகளால் பூத்த
நல்லாடை நைந்திருக்க,
ஊசிமுனை கோபங்கள்
தாபத்தனிமையை வென்றிருந்தது.

ஈரக்காற்றினிசையில்
மனம் லயிக்கவில்லை.

நிலவும் கூட
நட்சத்திரக்கூட்டத்துடணிணைந்து
மேகமறைவில்
களிப்பிலாழ்ந்திருந்தது.

திராவகமூச்சின் சூடு தகிக்க
எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

உதிரும் மணற்றுகள்களாய்
உன் நினைவை உதிர்க்க வழியின்றி..!

No comments:

Post a Comment