Sunday 5 January 2014

காதல்

தொலைவிலிருந்தென்
கனவில் நீளுகின்றாய்,
கனவில் புகுந்தென்
கவிதை ஆளுகின்றாய்.
கவிதை வடிவிலெனைக்
கலவி மருவுகின்றாய்.
கலவிப் பிரிந்த பின்னர்
காதல் உணர்த்துகின்றாய்!
காதல் வழியுதெனில்
காணா உன்வடிவில்!

No comments:

Post a Comment