Monday 20 January 2014

சிறகிழந்த சிட்டுக்குருவி

சிறகிழந்த சிட்டுக்குருவியொன்று
மடிதேடி வந்தமர்ந்தது
எந்தன் சிந்தனைச் சிறகில் 
இரண்டெடுத்து பொருத்திவிட
சிறிது தூரம் பறந்து
மீண்டுமென் மடி வந்து அமர்ந்தது.
சிறகு பொருத்திய இடமோ
ரணமாயிருந்தது.
எனக்கு புதிதாயிரண்டு
முளைத்திருந்தது.
மீண்டும் இரண்டெடுத்து
பொருத்த முயல்கையில்
எந்தன் கண்ணைக்
கொத்திவிட்டு
தத்தி தத்தி
ஓடி மறைந்தது,
கனவுப்பார்வைக்கு
விழிகளின்றி
விழித்தெழ வழியின்றி நான்….!

No comments:

Post a Comment