Sunday 5 January 2014

இறையினைத் தேடி


அவ்வப்போது ஊளையிட்டுத்தான் பார்க்கிறது
தனது இருப்பை அறிவிக்க,
தட்டித் தட்டி வைக்க
திமிருகையில் பல் பட்டு
இரத்தம் அங்கங்கே கசிகிறது.

என்னுள் வாழும்
ஒரு குழந்தையென அறிந்தும்
அணைக்க மனமின்றி
அடித்தே அடக்குகிறேன்.
அடங்குவதாயில்லை.

உறங்குவதாய் பாவனை செய்தபடி
ஒவ்வொரு நிகழ்விலும்
தனது இரை தேடி
மூச்சிறைக்க அலைகிறது!

இரையிடும் நிகழ்வுகளை விட்டு
விலகுவதாயிருக்கிறேன்.
வேறென்ன செய்ய?

இரையற்று வற்றி
இருப்பழித்து மறையுங்கால்
எனது இனியொரு குழந்தை
இறையினைத் தேடி
எழும்புமா?

No comments:

Post a Comment