Monday 27 January 2014

விரலழுக்கு


















வானில் பறந்தொரு
விண்மீனை கையகப்படுத்தி
ஒளிரும் கைகளுடன்
ஊர்வலமானேன்.
உற்சாகக் குவியலாய்
வனமெங்கும் திரிந்தேன்.
சிதைந்த வானத்தைக் குறித்து
சிந்தித்த நொடியில்
துணுக்குற்று,
விரைந்து சென்று
விண்மீனை ஒப்படைத்தேன்.
விலகாத நினைவுகளாய்
விரலழுக்கு அதன்மேல்
படிந்திருந்தது.
விடிந்ததும் விலகுமென
இரவு முழுதும் விழித்திருந்தேன்..!

No comments:

Post a Comment