Monday 27 January 2014

விலை நிலங்கள்















செந்தட்டியின் விரல் பிடித்து நடந்த
சிறுமியின் விழிகளிலந்த
சிறு வயலே விரிந்து கிடந்தது.

நெற்கதிர்களும்
அதைக் கொத்தும் பறவைகளும்
கண்ணுக்குள் காவியமாய்..

தந்தையின் கரங்களில்
அறுபட்டு,
தாயின் குத்தலில்
உடைபட்டு,
அரிசியாய் உருமாறி
அவள் வயிற்றின்
பசியாற்றியது பல நாள்.

தந்தை, தாயைப்போல்
வயலும் தன்னைவிட்டுப் போனது.

நகரமாய்,
நவீனமாய் மாறிய
விலை நிலங்களுமாய்,
கிராமங்கள்
தன்னை விற்றுக் கொண்டிருக்கின்றன.

அன்று
அரிசி சோற்றுக்கு
ஆலாய் பறந்த கூட்டம்
மீண்டும் அந்நிலைக்குப் போகும் காட்சி
அவளின் அகக்கண்ணில் இப்போது
தெரியத்தான் செய்கிறது

No comments:

Post a Comment