இடைவெளிகள் பெருகுவதால்
கருவிழியும் நிறையுதடி,
இமைக்கதவின் விரிசலிலே
பெருமழையாய் பொழியுதடி,
மடைதிறந்த பொழுதுகளில்
முடிவுறைகள் இல்லையடி,
மலைத்தொடரின் நீளமெனும்
நம் தொலைவை தவிர்த்திடடி!
ஆழ்மனத்தில் நானறிவேன்
அன்புச் சுடர் எரியுதடி,
தாழ்வாரப் படிகடந்து
தாவியெனைத் தழுவிடடி!
நாட்கணக்கில் இல்லையடி
நமதுறவு யுகங்களடி,
வாழ்வதற்கு நம்மிருவர்
விரலிணைய வேண்டுமடி!
கருவிழியும் நிறையுதடி,
இமைக்கதவின் விரிசலிலே
பெருமழையாய் பொழியுதடி,
மடைதிறந்த பொழுதுகளில்
முடிவுறைகள் இல்லையடி,
மலைத்தொடரின் நீளமெனும்
நம் தொலைவை தவிர்த்திடடி!
ஆழ்மனத்தில் நானறிவேன்
அன்புச் சுடர் எரியுதடி,
தாழ்வாரப் படிகடந்து
தாவியெனைத் தழுவிடடி!
நாட்கணக்கில் இல்லையடி
நமதுறவு யுகங்களடி,
வாழ்வதற்கு நம்மிருவர்
விரலிணைய வேண்டுமடி!
No comments:
Post a Comment