Monday 27 January 2014

தொடர்கின்றேன்!



முடிவுக்குள் தொடக்கம் நான் தேடேனோ??
முகமின்றி முகமூடி தரித்தேனோ?
விடிவென்று காண்பதும் நிஜம்தானோ?
விடையில்லா வினாவில்தான் மறைவேனோ?

மறையாத நிலைகொண்ட பூவுண்டோ?
மலர் பெற்ற வாசத்தில் பதிலுண்டோ?
விளக்கங்கள் தேடுமென் மனங்கண்டு
விலகாத நேசங்கள் துணையுண்டோ?

துணை நிற்கும் கரம் பற்றி தோள்சேர்த்து
தொலைதூர பாதையென் வசமென்று
பிணையத்தின் நிலைகொண்ட வாழ்விங்கு
பிடித்தேனோ அல்லேனோ தொடர்கின்றேன்!

No comments:

Post a Comment