விரிந்த இமைகொண்டு வீழ்த்த வந்தவள்,
விளக்கமின்றியென் மனதி லாழ்ந்தவள்,
பருகி கண்வழி உயிரைக் கொண்டவள்,
பனியை போர்த்தவெண் மலரை போன்றவள்.
இதழில் புதுமொழி எழுத வந்தவள்,
இனிமை சரமென சூடி நின்றவள்,
நுதலில் திலகமா யென்னைக் கொண்டவள்,
நினைவில் கலந்தெனில் வாசம் செய்பவள்.
மலரும் நாசியில் மனதை வென்றவள்,
மடியில் சாய்ந்திட உறக்கம் தந்தவள்,
புலரும் கனவெலாம் புதுமை சொல்பவள்,
புதிய தேடலின் பாதையாயவள்!
No comments:
Post a Comment