சுழலும் பூமியை
சற்றுத் தள்ளி நின்று பார்க்கிறேன்.
அகண்ட கடலில்
அமிழ்ந்த நிலம்,
எனதுடலைப்போல்.
இயற்கையை சிதைக்கும்
செயற்கை சின்னங்கள்,
என்னுடலும் அப்படித்தானே?
அலைந்து திரியும் விலங்குகளும்
ஆர்ப்பரித்து கூச்சலிடும் மனித இனமும்
உள்ளத்து ஓசைகள்போல்.
வெளிச்சப்புள்ளிகள்
விடியும்வரை எரிந்தாலும்
இருளகற்ற முடியாத ஒரு பக்கம்,
சுட்டெரிக்கும் சூரியனும்
சோர்ந்து போக
செயற்கைப் பிடியிலாழ்ந்த
சூழலுடன் இனியொரு பக்கம்,
எல்லாம் சுமந்து
சுழன்றுகொண்டேயவள்,
அவளின் பிரதிபலிப்பாய் நான்.
சுழலச் சுழல,
காலங்கள் விரைகின்றன,
ஒவ்வொரு வருடமும் விரைந்து
கடந்த வருடமாகின்றது.
எனினும்,
அவளின் தாயன்பையும், பொறுமையையும்
நானிழக்க, இழக்க,
வருடங்கள் மறைய,
நான் நானாக இல்லாமல்
இருகி, இருகி,
மருவிக்கொண்டே இருக்கிறேன்..!
இன்றேனும் தொடங்கவா?
நாட்குறிப்பைக் கிழித்தபடி,
நல்லன்பை,
நல்லுறவை
மனித நேயத்தை,
எல்லோரும் ஏற்க
என்னிலிருந்து தொடங்கவா
சற்றுத் தள்ளி நின்று பார்க்கிறேன்.
அகண்ட கடலில்
அமிழ்ந்த நிலம்,
எனதுடலைப்போல்.
இயற்கையை சிதைக்கும்
செயற்கை சின்னங்கள்,
என்னுடலும் அப்படித்தானே?
அலைந்து திரியும் விலங்குகளும்
ஆர்ப்பரித்து கூச்சலிடும் மனித இனமும்
உள்ளத்து ஓசைகள்போல்.
வெளிச்சப்புள்ளிகள்
விடியும்வரை எரிந்தாலும்
இருளகற்ற முடியாத ஒரு பக்கம்,
சுட்டெரிக்கும் சூரியனும்
சோர்ந்து போக
செயற்கைப் பிடியிலாழ்ந்த
சூழலுடன் இனியொரு பக்கம்,
எல்லாம் சுமந்து
சுழன்றுகொண்டேயவள்,
அவளின் பிரதிபலிப்பாய் நான்.
சுழலச் சுழல,
காலங்கள் விரைகின்றன,
ஒவ்வொரு வருடமும் விரைந்து
கடந்த வருடமாகின்றது.
எனினும்,
அவளின் தாயன்பையும், பொறுமையையும்
நானிழக்க, இழக்க,
வருடங்கள் மறைய,
நான் நானாக இல்லாமல்
இருகி, இருகி,
மருவிக்கொண்டே இருக்கிறேன்..!
இன்றேனும் தொடங்கவா?
நாட்குறிப்பைக் கிழித்தபடி,
நல்லன்பை,
நல்லுறவை
மனித நேயத்தை,
எல்லோரும் ஏற்க
என்னிலிருந்து தொடங்கவா
No comments:
Post a Comment