நீயற்ற பொழுதின் மீளா துயரத்தில்
பாய்மரமற்ற படகாய்
பரிதவிக்கிறேன்..
தென்படாத தொடுவானக்கரைக்காக
விழியீரம் கோர்க்கிறேன்.
வருகையில் தென்றலாய்
விடுகையில் புயலாய்
நினைவது கனலாய்
நீள்கிறாய்.
சலசலத்த கொடியுதிர்த்த
உப்பு நீர்
கண்ணீருடன் கலந்தது.
வான் பறந்த
பெயர் தெரியாப் பறவைகள்
என்துயர்
எடுத்துச்செல்ல மறுத்தன.
ஆழ்கடலின் அமைதியில்
அமிழும் ஆசையில்
கரைதேடும் அலைகளுடன் கைகோர்த்து
ஆற்றாமையால்
கவிதை வடிக்கத் தொடங்கினேன்!
No comments:
Post a Comment