Monday 20 January 2014

உறுத்தும் உணர்வுகள்

மாலை வெயிலில்
மனச்சிறகை விரித்த பறவையின்
அலகுக் கூர்மையில்
அகப்பட்ட உணர்வுகள்
தெளிவற்ற வானத்தில்
வீசப்பட்டு
மோதிய காற்றின்
ஆளுமையில் அமிழ்ந்து
துளித்துளியாய்
தரையில் சிதறி
ஆழ்கடல் அடைந்த பின்னும்
உணர்வுகளாய்
உறுத்தியபடியே இருந்தன!

No comments:

Post a Comment