Monday 27 January 2014

நிலவில்லா ஆகாயம்

இதய கூடாரத்தின்
கனவு களஞ்சியத்தில்
நினைவுச் சிதறல்களை
மாலையாக்கி
பாதுகாத்திருந்தேன்.

இரவுகளின்
தனிமை பொழுதுகளில்
என் பிம்பத்திற்கு அணிவித்து
அழகு பார்த்திருந்தேன்.

பளீரிட்ட
வெளிச்ச வர்ணப் பகல்களில்
மாலையின் மகத்துவம்
மங்கியதாய் நீ நினைத்தது
என் பிழையில்லை.

ஒளி மழையாயினும்
இருள் தடம் ஆயினும்
என் துணை
இம்மாலையனக் கொண்டேன்.

காலை, மாலை, இரவென
கவிதை பொழுதுகளிலெல்லாம்
நினைவுப்பூமாலை துணையிருக்க,
நிலவில்லா ஆகாயமாய்
காகிதப்பூ வாழ்வில்
வசந்தம் தேடியபடி நான்...!

No comments:

Post a Comment