Saturday 11 January 2014

தேநீர்

















அதிகாலை பனிக்காற்றில்
எழும்ப மனமின்றி
சுருண்டு கிடந்தவனை,
துயிலெழுப்ப அருகமர்ந்து,
தோள்தொட்டு அழைக்க,
விழியிமை திறந்து
விடியலாயவள் முகங்கண்டேன்.

அன்றலர்ந்த செந்தாமரையாய்,
அகமும், முகமும் மலர்ந்து,
இருவிழியில் தண்ணிலவையேந்தி,
இதழ்களிலே புன்முறுவல் சூடி,
உருகிய தேன்பாகாய் உச்சரித்தாள்,
“அன்பே, இன்று உன் தினம்,
மணக்கச்செய்,
பிறர் மனம் இனிக்கச்செய்”

எழும்பியவன் கரங்களிலே
எடுத்துத் தந்தாள் ஒரு கோப்பை.
இதழ் பொருத்தி சுவைத்தேன்.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!!!!!!!!!!!
எப்படியடி இவ்வளவு மதுரம்?
இனிப்பில்லா தேநீரே
நான் கொடுத்தேனென
முருவலித்தாள்!

பிறகெப்படி?
தேநீரை தயாரிக்கையில்
உன் விரல் நுனியேதும்
தேநீரைத் தொட்டிருக்குமோ?”

No comments:

Post a Comment