Monday 20 January 2014

கிழ ஆடு

அந்த கிழ ஆடு ஊரின் ஒதுக்குப்புறமான சாலையில் நடந்து வரும்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணற்றைக் கவனியாமல் அதனுள் தவறி விழுந்துவிட்டது.
அவ்வழியே சென்ற பலரும் அது கிழ ஆடு என்பதால் அதை காப்பாற்ர முன்வரவில்லை. மாலை ஆகியும் அந்த ஆடு அந்த பாழுங்கிணற்றில் சாகாமல் தவித்தபடி இருந்தது.
ஊர்மக்கள அதை பார்த்து, பரிதாபப்பட்டு, அனைவரும் கூடி, மண்ணை வெட்டி சரித்து அந்த கிழ ஆட்டை அந்த பாழுங்கிணறிலேயே சமாதி ஆக்கிவிடுவோமென தீர்மானித்தனர்.
அதன்படி அனைவரும் சென்று மண்ணை வெட்டி சரிக்க ஆரம்பித்தனர். மண் வெட்டப்பட்டு தன் மேல் வீசப்படுவதைக் கண்ட கிழ ஆடு, தன் உடலை சிலிர்ப்பியது. மண் சிதறி காலுக்கு அடியில் ஆனது.
மீண்டும் தன்மேல் மண் வீசப்படவே, உடலை ஒவ்வொரு முறையும் சிலிர்த்தபடி, மண்ணை உதற, மண் காலுக்கு அடியிலாக சிறிது சிறிதாக ஆடு மேலெழும்பி தரைக்கு வந்து அனைவரும் ஆச்சரியபடும் விதமாக, உயிர்பிழைத்தது.
நாமும் பலநேரம் அப்படித்தான். நம்மேல் வீசப்படும் குற்றச்சாட்டுகளையும், ஏளணங்களையும் உதறி காலுக்கடியில் ஆக்கினால், உயர்ந்த நிலைக்கு வருவோம்!

No comments:

Post a Comment