Monday 20 January 2014

மஞ்சள் மலர்

அலுப்புடன் வந்தவனின்
கரம் பிடித்து
கைப்பையை வாங்கி வைத்து
முகம் கழுவி வருவதற்குள்
கோப்பையை ஏந்தி
நொடிக்கு நூறுமுறை
எனையழைக்கும்
என்னவளன்று
மஞ்சள் மலராய்
சுருண்டு கிடந்தாள்.

என்னவாயிற்று?
அருகமர்ந்து
கரம்பிடித்து மடியிருத்தி கேட்க,
வேதனையில் முகம் சுளித்து
என்மடியில் தலை புதைத்து,
இயலாத நிலை உரைத்தாள்.

தேநீரெடுத்து கொடுத்து,
கை பிடித்து,
கால் பிடித்து,
தலை பிடித்து,
வேதனையை நீக்க
வெகுவாக முயன்றும்,
பிடித்தத்தில் போகாத வேதனை
எனையினியும் பிடித்ததில்
கரையக் கண்டேன்!

No comments:

Post a Comment