அலுப்புடன் வந்தவனின்
கரம் பிடித்து
கைப்பையை வாங்கி வைத்து
முகம் கழுவி வருவதற்குள்
கோப்பையை ஏந்தி
நொடிக்கு நூறுமுறை
எனையழைக்கும்
என்னவளன்று
மஞ்சள் மலராய்
சுருண்டு கிடந்தாள்.
என்னவாயிற்று?
அருகமர்ந்து
கரம்பிடித்து மடியிருத்தி கேட்க,
வேதனையில் முகம் சுளித்து
என்மடியில் தலை புதைத்து,
இயலாத நிலை உரைத்தாள்.
தேநீரெடுத்து கொடுத்து,
கை பிடித்து,
கால் பிடித்து,
தலை பிடித்து,
வேதனையை நீக்க
வெகுவாக முயன்றும்,
பிடித்தத்தில் போகாத வேதனை
எனையினியும் பிடித்ததில்
கரையக் கண்டேன்!
கரம் பிடித்து
கைப்பையை வாங்கி வைத்து
முகம் கழுவி வருவதற்குள்
கோப்பையை ஏந்தி
நொடிக்கு நூறுமுறை
எனையழைக்கும்
என்னவளன்று
மஞ்சள் மலராய்
சுருண்டு கிடந்தாள்.
என்னவாயிற்று?
அருகமர்ந்து
கரம்பிடித்து மடியிருத்தி கேட்க,
வேதனையில் முகம் சுளித்து
என்மடியில் தலை புதைத்து,
இயலாத நிலை உரைத்தாள்.
தேநீரெடுத்து கொடுத்து,
கை பிடித்து,
கால் பிடித்து,
தலை பிடித்து,
வேதனையை நீக்க
வெகுவாக முயன்றும்,
பிடித்தத்தில் போகாத வேதனை
எனையினியும் பிடித்ததில்
கரையக் கண்டேன்!
No comments:
Post a Comment