Saturday 11 January 2014

வாழ்வெனக் கண்டேன்.

பிறப்பும் இறப்பும்
ஒன்றெனச் சொல்லி
பிரிதொரு நாளின்
பிரிதலை நினைந்தேன்!

விதைத்தவை முளைத்ததும்
அறுவடை செய்வதில்
பிரிவென சொல்லி
உருகிட உகுந்தேன்.

இயல்பாய் இருத்தலில்
சுகமென சொல்லி
இருத்தலை இயல்பென
ஆக்கிட முயன்றேன்.

காதலில் வாழ்தலும்,
வாழ்தலில் காதலும்,
கலந்திட கனவுகள்
உயிர்பெற எழுந்தேன்!

உறவுகள் பிரிவதும்
உணர்வுகள் தொலைவதும்
சரியெனக் கொள்ளுதல்

வாழ்வெனக் கண்டேன்.

No comments:

Post a Comment