Saturday 11 January 2014

இரயில் பயணம்

ஐந்து இந்தியரும், ஐந்து அமெரிக்கரும் விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு இரயிலில் பயணம் மேற்கொண்டனர். 
அமெரிக்கர் சென்று டிக்கேட் வாங்கி வந்து பயணம் செய்தனர். இந்தியர் ஐவரும் சென்று ஒரு பயணி மட்டும் பயணம் செய்ய டிக்கேட் வாங்கி வந்தனர். இதைக்கண்ட அமெரிக்கர்கள், இந்தியர்கள் எப்படி பயணம் செயப் போகிறார்களென பார்க்கும் ஆவலில் இருந்தனர். டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, இந்தியர் ஐவரும் ஒரு டாய்லெட்டில் நிழைந்து தாளிட்டுக் கொண்டனர். டிக்கெட் பரிசோதகர் வந்து டாய்லெட் கதவை தட்ட, கதவு திறந்து ஒரு கை டிக்கெட்டை நீட்ட வாங்கி பார்த்துவிட்டு, கொடுத்துவிட்டு போய்விட்டார். இதை கண்ட அமெரிக்கர்கள் தாமும் அதுபோல செய்யவேண்டுமென நினைத்து, திருச்சியிலிருந்து திரும்ப விழுப்புரம் வரும்போது ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டு இரயில் ஏறினர். இந்தியர் ஐவரும் டிக்கெட்எதுவும் எடுக்காமல் ஏறினர்.
டிக்கெட் பரிசோதகர் வர அமெரிக்கர் ஐவரும் டாய்லெட்டில் ஒளிந்துகொண்டனர். இந்தியர்கள் ஐவரும் சென்று அதிலொருவன் அமெரிக்கர் இருந்த டாய்லெட்டின் கதவைத் தட்டி டிக்கெட் எனக் கேட்க, ஒரு கை நீண்டு டிக்கெட் காட்ட வாங்கிகொண்டு இவர்கள் ஐவரும் எதிர் டாய்லெட்டில் நுழைந்துவிட்டனர்.
பரிசோதகர் வர, அந்த டிக்கெட் காண்பித்து, இந்தியர் தப்பித்துவிட, அமெரிக்கர் ஐவரும் டிக்கெட் இல்லா பயணத்திற்கு இழப்பீடு கொடுத்தனர்.
விழுப்புரத்திலுருந்து பாண்டிச்சேரிக்கு பாஸஞ்சர் இரயிலில் ஏறும்போது இந்தியர் ஐந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு ஏற, இருமுறை ஏமாற்றப்பட்ட அவமானத்தில் அமெரிக்கர்கள் ஒரு டிக்கெட் கூட வாங்காமல் ஏறி, பயணத்தின்போது ஒளிய டாய்லெட் தேடி, பாஸஞ்சர் இரயிலில் அலைந்து கொண்டே இருந்தனர், பர்சோதகர் வரும்வரை…..! 

No comments:

Post a Comment