அந்த காரை நான் மலைப்பாதையில்
வேகம் குறைத்துத்தான் செலுத்தி கொண்டிருந்தேன். வளைந்து வளைந்து மேலேறிக்
கொண்டிருந்த சாலையில் நான் மட்டும் தனித்து உதட்டில் பிடித்த பாடலை ஹம்மிங்க்
செய்தபடி போய்க்கொண்டிருந்தேன்.
திடீரென்று கார் நிலை
தடுமாறவே ஓரமாய் நிறுத்தி இறங்கி பார்த்தால் பின் சக்கரத்தில் ஒன்றில் காற்று
இறங்கிபோய் இருந்த்து. கார் டிக்கியில் இருந்து ஸ்டெப்னி டயரை எடுத்து மாற்ற
தீர்மானித்து, கைசட்டையை மடக்கிவிட்டபடி டிக்கியை திறந்தேன்.
யாரேனும் உதவிக்கு
கிடைப்பார்களா என சுற்றுமுற்றும் பார்த்தால் சிறிது தொலைவில் ஒரு பலகையில் “அன்னை
தெரசா மன நோயாளிகள் காப்பகம்” எனும் எழுத்துக்களை கண்டேன். வேறு எங்கணும் யாரையுமே
உதவிக்கு அழைக்க முடியாத சூழலென உணர்ந்து, ஸ்டெப்னி டயரை இறக்கி வைத்துவிட்டு
காரின் சக்கரத்தின் போல்ட்டுகளை கழட்ட ஆரம்பித்தேன்.
டயரை கழட்டி ஓரமாய்
வைத்துவிட்டு கழட்டிய 4 போல்ட்டுகளை ஓரமாய் வைத்து விட்டு ஸ்டெப்னியை மாட்ட
ஆரம்பித்தேன். எங்கிருந்தோ ஓடிவந்த குரங்கொன்று அந்த நான்கு போல்டுகளை
அள்ளிக்கொண்டு ஓடி மலையில் மறைந்துவிட்ட்து.
திடீரென நிகழ்ந்த
நிகழ்வால் அதிர்ச்சியிலாகி செய்வதறியாது திகைத்து, வேறு போல்ட் வாங்க எங்கு
செல்லவேண்டும்? அதுவரை இங்கு காரில் யாரை பாதுகாப்பாக வைப்பது என பல்வேறு
கேள்விகள் மனதினுள் கேட்டபடி இருந்தேன்.
அப்போது அந்த வழியில் நடந்து
வந்த ஒருவர் என்னிடத்தில் என்னவென கேட்டார். நான் எனது சூழ் நிலையை சொன்னபோது,
மற்ற மூன்று சக்கரங்களில் இருந்தும் ஒவ்வொரு போல்ட்டை கழட்டி ஸ்டெப்னி டயருக்கு
மாட்டி அடுத்து உள்ள பழுது நீக்கும் இடத்திற்கு காரை ஓட்டி சென்று சரி செய்துகொள்
எனக் கூறினார்.
நான் அவரை வியந்தபடி,
“நீங்கள் அருமையான வழி கூறினீர்கள், எவ்வாறு இப்படி சிந்தித்தீர்கள்?” என
கேட்டபோது அவர் சொன்னார், “நான் பைத்தியம்தான், ஆனால் நான் முட்டாளில்லை”
No comments:
Post a Comment