நினைவுகளின் ததும்பல்களில்
நீளுமென் இரவுகள்
கனவுகளின் காத்திருப்பில்
புலருமென் விடியல்கள்.
தொலைந்திடவும் தொடர்ந்திடவும்
தொடர்பில்லா நிகழ்வுகள்,
பருவ நிலை கடந்த பின்னும்
பயிரிடாத உணர்வுகள்.
ஏக்க சுழல் எனை வருத்த
இயல்பிழந்த சிறகுகள்,
புனைமுகத்தின் வெளிக்கொணரா
சுயமிழந்த சிதறல்கள்,
நீண்டதொரு அரவணைப்பின்
நிழல் சுமந்த சுவடுகள்,
நித்தமெந்தன் வாழ்விலே
நீர் சுமந்த கோடுகள்,
நீயெனக்கு வாழ்க்கையின்
இறந்தகாலமெங்கிலும்
உனை சுமந்த நெஞ்சுடன்
உயிர் சுமக்க உதவிடும்!
அவள் நினைவுகள் காலம் எல்லாம் கலந்தே இருக்கட்டும்!
ReplyDelete