Saturday 16 November 2013

என் மாயக்கார நிலவே!



இமைவிழி மூடாமல்
எங்கணுமே தேடியலைந்து
இரவுகளைப் பிழிந்து
கனவுலகில் நுழைந்து,
கவிதையினுள் விழுந்து,
உருகி, உறைந்து,
கருகி, கரைந்து,
விடியலிலே
வரும் நிலவை
கண்டவுடன் கண் மினுக்க,
காதலிலே மெய் சிலிர்க்க
தென்றலென உனை நினைத்து
தீந்தமிழில் கவியுறைத்து,
வாரியுனை
அணைத்த எந்தன்
திடு மாற்றம்,
எப்படி நிகழ்ந்தது?
என் கோபமும்,
கவலையும்,
எங்கே போனது?
என் மாயக்கார நிலவே!

No comments:

Post a Comment