Thursday 14 November 2013

ஆற்றாமை













ஆற்றாமை சிந்திய அறைகூவல்
உள்ளத்தின் மூலை முடுக்கெலாம்
இரத்த வர்ணம் பூசி
பரவிக் கிடக்கிறது.

படித்த கதைகளும்,
பாதித்த நிகழ்வுகளும்
நெஞ்சத்தில்
நீங்கா இடம் பிடித்தபடி..

அகதி எனும் சொல்லே
உள்ளத்தை அறுக்கிறது.
என் இனம் என
ஏன் இவர்களுக்கு சொல்ல
மனம் மறுக்கிறது?

மேல் பூச்சாய்
உதடுகளுக்கு மட்டும்
ஒளிர் வண்ணம் பூசி
இனிப்பைத்தடவி
இன்பமாய் பேசிவிட்டு
சுயமிழந்து நிற்கும்
கசடுகள் எங்கும்....

மாண்டு போனவன்
மீண்டு வருவானோ?
மீட்டுத் தருவானோ?
எம் மக்கள்,
என் இனம்,
என் சகோதரர்களின்
மானத்தையும், மகிழ்வையும்...?

No comments:

Post a Comment