என்னை உணர்ந்து நீ இருக்கும்வரை
எந்தன் மகிழ்விற்கு குறைவு இல்லை.
உந்தன் மடியூஞ்சல் படுக்கையிலே
எந்தன் கனவுகளோ சலிப்பதில்லை.
நேசப் பூமலரைச் சூடையிலே
நீயும் தேவதையின் வம்சமடி,
சுவாசம் உன்னுடைய தீண்டலிலே
வாசம் பெற்றுவிடக் கூடுமடி!
நானும் நீயும் ஒரு கானமென
நாதத் தேன்மழையில் உளம் நெகிழ
வாழும் காலமதில் பூமலர
வானில் நாம் பறக்கலாகுமடி!
எந்தன் மகிழ்விற்கு குறைவு இல்லை.
உந்தன் மடியூஞ்சல் படுக்கையிலே
எந்தன் கனவுகளோ சலிப்பதில்லை.
நேசப் பூமலரைச் சூடையிலே
நீயும் தேவதையின் வம்சமடி,
சுவாசம் உன்னுடைய தீண்டலிலே
வாசம் பெற்றுவிடக் கூடுமடி!
நானும் நீயும் ஒரு கானமென
நாதத் தேன்மழையில் உளம் நெகிழ
வாழும் காலமதில் பூமலர
வானில் நாம் பறக்கலாகுமடி!
No comments:
Post a Comment