Thursday 14 November 2013

மீளுதல்

இரவுகளின் தொடக்கங்கள்
களிப்பாயில்லை,
முடிவுகளின் விளக்கங்களோ
வியப்பாயில்லை.
விடிந்திடும் காலையில்
விடைவரும் வேளையில்
அடங்கிடும் கனவுகள்
அனைத்துமே என்னுள்!
தொடங்கிய யாவையும்
தொடர்பிலா போதிலும்
முடிவதேன் உன்னிடம்
மீளுதல் இன்றியே!

No comments:

Post a Comment