Tuesday 5 November 2013

மீண்டும், மீண்டும்!



பிடிவாத மனங்களின்
பாதச்சுவடுகளில்
புதையுண்ட காலங்கள்,
தளர்த்தப்படுமென எதிர் பார்ப்பில்
தொடருமென் பயணங்கள்,
முன்னேயும்,
பின்னேயும்,
முரண்பாடுகள்
முகிழ்ந்தவண்ணமிருக்க,
அவற்றினழகில் லயித்தபடி,
வாளெடுத்து களையெடுக்க
விருப்பமின்றி,
விடுகதையாய் புன்னகைத்து,
வெறுமைகளை பிரசவித்து,
மனச்சுமைகளை
மேலும், மேலும் அடைகாத்து,
வளைந்தும்,
நெளிந்தும்,
தவழ்ந்தும்,
முன்னேற முயற்சித்து
முண்டிக்கொண்டே இருக்கிறேன்,
மீண்டும், மீண்டும்!

No comments:

Post a Comment