Monday 18 November 2013

அசட்டு கர்வம்











பிழிந்த துணிகளில்
சிதறிய துளிகளாய்
என் கனவில் விசும்பல்கள்!

உலரும் பொழுதுகளில்
உருத்தலாய் கதிரொளி,
உன் நினைவுகளில் நான்!

கவனமின்றி தேய்த்ததால்
கருகிப் போனதாய்
காலத்தின் வடுக்கள்..!

அடுக்குகளில் உலவும்
வண்டுகளின் வாசம்
அன்றாட வாழ்வின்
அவலங்களின் உருவம்!

இத்தனைக்கும் மீறி
எனை எடுத்துடுத்தி
கண்ணாடி முன்னின்று
அழகு பார்க்கையில்
என்னால்தானுன்
வாழ்வின் அழகு
மேம்பட்டதாக எண்ணி
எனக்குத்தான்
ஏத்தனை கர்வம்
அசட்டுத்தனமாய்!

No comments:

Post a Comment