மெல்லிய மழைத்தூரல்,
விரல்களில் குளிர்மேகம்,
கவிதையின் விழிகளைக்
கனவினில் கொண்டு
வெள்ளைக் காகிகதத்தில்
வரிகளாய் வரைந்திட்டேன்.
தேநீரைக் கொண்டு
என்னருகே வைத்து
புறம் தழுவி,
குளிரினை துரத்தியபடி,
கன்னத்தில்
செங்கன்னத்தைச் சேர்த்து,
அவள் வரிகளை
அவளே வாசித்தாள்.
ஒவ்வொரு வரியிலும்
மகிழ்வு கூடுவது
அரவணைப்பினிருக்கத்தில்
ஆஹா, தெரிந்தது.
அதற்குப் பின் கவிதை
அங்கேதான் இருந்தது...!
தேநீரோ
ஆறிப்போய் கிடந்தது..
விரல்களில் குளிர்மேகம்,
கவிதையின் விழிகளைக்
கனவினில் கொண்டு
வெள்ளைக் காகிகதத்தில்
வரிகளாய் வரைந்திட்டேன்.
தேநீரைக் கொண்டு
என்னருகே வைத்து
புறம் தழுவி,
குளிரினை துரத்தியபடி,
கன்னத்தில்
செங்கன்னத்தைச் சேர்த்து,
அவள் வரிகளை
அவளே வாசித்தாள்.
ஒவ்வொரு வரியிலும்
மகிழ்வு கூடுவது
அரவணைப்பினிருக்கத்தில்
ஆஹா, தெரிந்தது.
அதற்குப் பின் கவிதை
அங்கேதான் இருந்தது...!
தேநீரோ
ஆறிப்போய் கிடந்தது..
No comments:
Post a Comment