பூஞ்சிறகாய் நீயென்னுள்
புதுக்கவிதை படிக்கிறாய்,
தேன்மெழுகாய் நானுன்னால்
மனமுருகி வாழ்கிறேன்.
கனல்காற்றாய் நீயென்னை
தகித்தபடி போகிறாய்,
கார்முகிலாய் நானுன்னை
நினைந்தபடி சுழல்கிறேன்.
சுடுதீயாய் நீயென்னை
சுட்டெரிக்கப் பார்க்கிறாய்
செந்தமிழால் நானுன்னை
சேர்த்தணைக்கப் பார்க்கிறேன்.
விடுகதையாய் நீயெந்தன்
விடைமறைத்து மீள்கிறாய்
வேதனையின் சுமை நீங்க
உனை நாடி நிற்கிறேன்.
சில நேர பிழை பொறுத்து
சிந்தனையில் குளிரிருத்தி
எனை மீட்க வருவாயா?
இதழ் பூத்து மலர்வாயா?
புதுக்கவிதை படிக்கிறாய்,
தேன்மெழுகாய் நானுன்னால்
மனமுருகி வாழ்கிறேன்.
கனல்காற்றாய் நீயென்னை
தகித்தபடி போகிறாய்,
கார்முகிலாய் நானுன்னை
நினைந்தபடி சுழல்கிறேன்.
சுடுதீயாய் நீயென்னை
சுட்டெரிக்கப் பார்க்கிறாய்
செந்தமிழால் நானுன்னை
சேர்த்தணைக்கப் பார்க்கிறேன்.
விடுகதையாய் நீயெந்தன்
விடைமறைத்து மீள்கிறாய்
வேதனையின் சுமை நீங்க
உனை நாடி நிற்கிறேன்.
சில நேர பிழை பொறுத்து
சிந்தனையில் குளிரிருத்தி
எனை மீட்க வருவாயா?
இதழ் பூத்து மலர்வாயா?
No comments:
Post a Comment