Thursday 14 November 2013

நீயெனில் பாகமடி!

அருவியாய் பொழியுமுன்
அன்பினிலே யென்மனம்
ஆழ்ந்து போனதடி!

மறுமொழி கூறிட
மொழியினைத் தேடியே
மேலும் விரையுதடி!

கருவினில் பூத்ததாய்
குறைவிலா தேன்மழை
கனவினில் பாயுதடி!

பருகிட சுவையது
பெருகிட பால் நிலா
பாவையென்றானதடி!

ஒருமுறை உன்விழி
ஒளிமழை நான் பெற
உயிருனைச் சார்ந்ததடி!

வருமினி காலமும்
வாழ்வினில் வளம்தர
நீயெனில் பாகமடி!

No comments:

Post a Comment