Saturday 16 November 2013

வாடியிருந்தாள்

















வாடியிருந்தாள்
விழிமலர் மூடியிருந்தாள்,
இதழ்வலி சூடியிருந்தாள்,
என்னுயிர் நாடியிருந்தாள்,

அருகமர்ந்தேன்,
அவள் தலை தடவியிருந்தேன்,
அனல் தரும் நுதல் இணைந்தேன்,
அவள் துயர் என்னிலுணர்ந்தேன்,

விழிகள் கனத்தேன்
இரவுகள் முழுதும் விழித்தேன்,
இமைகளின் உறக்கம் தவிர்த்தேன்,
என்னுயிர் வாடத் துடித்தேன்,

காலை மலர்ந்தாள்,
கருவிழி என்னுள் புகுந்தாள்
கனியிதழ் என்னை மொழிந்தாள்,
கவிதையாய் காதல் பொழிந்தாள்,
உயிருடன் ஒன்றிக் கலந்தாள்!

2 comments:

  1. காதல் கவிதை அருமை சகோ!

    ReplyDelete
  2. மொடரேசனை நீக்கி விடலாமே ஐயா!

    ReplyDelete