Wednesday 30 July 2014

இனிப்பேனே


முத்தாரம் கேட்ட இளமன்னன் மார்பில்
வித்தாரக் கள்ளி விளையாடுகின்றாய்
கொத்தோடு பூவை விரல்கொண்டு கிள்ளி
அத்தானென் மேலே கணை பாய்ச்சுகின்றாய்

செம்பூவே யுந்தன் இதழ்பூத்த நகையில்
விண்மீதிலாடும் பொன்னூஞ்சல் கண்டேன்
கண்பார்த்த மண்ணின் துகள் மீதிலெல்லாம்
கவித் தேனின் ஊற்று துளிர்த்தாடக் கண்டேன்

நீர் கொண்ட நிலவை வான்மேவிக் காணாம்
நிலமீது பூத்த மலர்மீதும் காணாம்
கார்கொண்ட மேகம் மழை நீரே யாகாம்
கனியேயுன் மீது துளிர்த்த நீரென் உணவாம்

பனித்ததோ உன்மீது துளிர்த்ததோ பெண்ணே நீ
குளித்ததோ பன்னீரைத் தெளித்ததோ அறியேனே
எனக்கது சுவைத்தேனே இனியதைச் சுவைப்பேனே
எந்நாளும் என் வாழ்விலுனைக் கொண்டு இனிப்பேனே

No comments:

Post a Comment