மீண்டும் மீண்டும் உன் நினைவுப் பாதையில்,
இடரும் கல்லென எடுத்தெறிகின்றாய்,
விழுகின்ற இடங்களிலெல்லாம் பூவாய் மலர்ந்து
உன் பாதம் நோகாதிருக்க விரிகின்றேன்.
எங்கேனும் சில முள் என்னைமீறி உன் பாதம் தைக்க
என்னுள்ளே இரத்தம் கசிகிறது.
பூக்களுக்கும் வலிக்குமென யாரும் அறிந்திடாமலிருக்க
இரகசியம் காக்கின்றேன்.
உனக்கு என்வலி என்றும் அறியாதிருக்க
ஊமையாகின்றேன்.
இடரும் கல்லென எடுத்தெறிகின்றாய்,
விழுகின்ற இடங்களிலெல்லாம் பூவாய் மலர்ந்து
உன் பாதம் நோகாதிருக்க விரிகின்றேன்.
எங்கேனும் சில முள் என்னைமீறி உன் பாதம் தைக்க
என்னுள்ளே இரத்தம் கசிகிறது.
பூக்களுக்கும் வலிக்குமென யாரும் அறிந்திடாமலிருக்க
இரகசியம் காக்கின்றேன்.
உனக்கு என்வலி என்றும் அறியாதிருக்க
ஊமையாகின்றேன்.
No comments:
Post a Comment