Tuesday 22 July 2014

விஞ்ஞானி
















முளைத்து, வளர்ந்து, மலர்ந்த பொழுதுகளில்
அனுபவித்தலெல்லாம் ஆனந்தம்.
தளர்ந்து, மடிந்து, மறையும் வேளைகளில்
அனுபவம் விளக்கும் படிப்பினை.
சுகமாய் மலர்ந்தும்,
சுமையென கடந்தும்,
படித்த வாழ்வியல் பாடம் கொண்டு
எழுதிய முடிவுரை யாவும்
தேடலின் முற்றுப்புள்ளியாய்
அமைந்ததேயில்லை.
அண்டத்தில்
அறியாத பொருளும், 
அறியாத ஆற்றலும்
தொண்ணூற்றைந்து விழுக்காடாம்.
அதனை அறியும் முயற்ச்சியில்
கோடிக்கணக்காய் விஞ்ஞானிகள்.
அவர்கள் பாதையில்
நானில்லையெனினும்,
என்னுள் தேடும்
நானுமோர் விஞ்ஞானியே!

No comments:

Post a Comment