அவ்வெழுத்துக்களின் கனம்
கூடுதலாயிருந்ததில்
ஒவ்வாத மையின் நீர்த்த
தன்மையால்
அழுத்தம் தாளாமல்
பேனாவின் முனை விரிந்து மலர்ந்திருந்தது
எண்ணத்திற்கும் எழுத்திற்குமான
விகிதாச்சாரம்
குறையக் குறைய
ஆவேசத்தின் அந்நொடியில்
முனை ஒடிந்த பேனாவுடனான
போராட்டம் தொடங்கிற்று
சில இடங்களில் பொத்தல்களும்
தடம் மாறிய கோடுகளும்
கோணம் மாறிய எழுத்துக்களுமாய்
பிரசவித்த கவிதையாயினும்
வலி(மை) மிகுந்த எழுத்துக்களாதலால்
சுவைமட்டும் குன்றாமலே இருந்தது
No comments:
Post a Comment