வெம்மையை அள்ளிப் பருகி
அனலுக்குள் முகம் புதைத்து
கனல் படுக்கையிலுருண்டு
அந்தகாரமெங்கும் தீ ஜ்வாலையில்
அமிழ்த்தி
கார்மேகத் துளியொன்று
என்றேனும் கிட்டுமோவென ஏங்கிய
நெஞ்சிற்கு
பெருமழையாய் பொழிந்து
குளிர்மழையாய் இனித்து
புறம் நனைத்து
அகம் நிறைத்து
ஆழ்ந்த அன்பினில் திளைக்கவைத்து
விட்டுச் சென்றாயடி என்னிளங்கிளியே,
ஏக்கம் கொண்டேனடி தளிர்கொடியே
கண் மூடியுனைக் காண்கையில்
அகம் சிலிர்க்கவைத்து
விழிதிறந்துனைத் தேடுகையில்
காணாது
அனல்பட்ட புழுவாய்
பாலைவனங்கண்ட மென்மையான புஷ்பமாய்
வாடுமென்னுள்ளத்தில்
மீண்டுமொரு அடர் மழையாய்
எனை விட்டு நீங்காத தொடர்மழையாய்
என்று வருவாயடி?
No comments:
Post a Comment