Monday 14 July 2014

புதையுண்டு

எண்ணச்சுமைகளை சுமந்து
ஏக்கப் புதையல்களில் தடம் படித்தேன்.
பற்ற கொம்பில்லா அந்நிலை
பற்றற்ற நிலையின் தொடக்கமாயிருக்கலாம்.

கடிவாளப் பார்வைக்கு விசாலம் கிட்டாமல்
காத்திருப்பு நொடிகளின் பாரம்
சகிப்புத்தன்மையின் ஆழத்தை பரிசோதித்தது.
சுற்றியிருந்த அடர்வனத் தோப்பின் தொடர்பற்ற விசாரிப்பும்
நீள்வானத்தின் நிச்சலனத்தை மறைத்தவாறு
துக்கத்தை விதைப்பதாகவே இருந்தது.

தள்ளாடும் தலையும், தவிக்கும் கரமும்
பாதம் பதியா நிலையும்
ஒரு விதத்தில்
பரவசமூட்டுவதாகவே இருந்தது.

ரசிக்கும் தன்மையிருந்தால்
எச்சூழலும் இனிமை பயக்குமென
அன்று அறிந்து கொண்டேன்

No comments:

Post a Comment