தனிமைச்சுவற்றில் மனச்சிலந்தியின் வலையில்
வண்ணத்துப்பூச்சியின் நட்பை பற்றிய
எனது கவிதை சிக்கியிருந்தது.
அலமாரிகளை துடைத்து
ஆன்மாக்களுக்கு வெளிச்சம் கொடுக்கவந்த
அஹிம்சாவாதிகளின் கரங்கள்
அழுந்தத் துடைத்ததில்
சிலந்தியின் வலையுடன்
எனது கவிதையின் முனைகளும் உடைந்தன.
உணர்வுகளில் உருவான கவிதையாதலால்
மீண்டும் எழுத முயற்சியெடுக்காமல்
முனை மழுங்கிய கவிதை வரிகளின்
எழுத்துக்களை கூட்டிக்கொண்டிருக்கிறேன்,
வண்ணத்துப்பூச்சியின் நட்பை பற்றிய
எனது கவிதை சிக்கியிருந்தது.
அலமாரிகளை துடைத்து
ஆன்மாக்களுக்கு வெளிச்சம் கொடுக்கவந்த
அஹிம்சாவாதிகளின் கரங்கள்
அழுந்தத் துடைத்ததில்
சிலந்தியின் வலையுடன்
எனது கவிதையின் முனைகளும் உடைந்தன.
உணர்வுகளில் உருவான கவிதையாதலால்
மீண்டும் எழுத முயற்சியெடுக்காமல்
முனை மழுங்கிய கவிதை வரிகளின்
எழுத்துக்களை கூட்டிக்கொண்டிருக்கிறேன்,
No comments:
Post a Comment