வாசகங்களின்றி என்னுயிர்தொட்டாய்,
வெளுத்தவெண் பொழுதுகளில்
வண்ணம் நிறைத்தாய்.
வெளுத்தவெண் பொழுதுகளில்
வண்ணம் நிறைத்தாய்.
தேன்குடித்த உன்கவிப்பூக்களை
தினம்பருக ஆவல்கொண்டேன்.
உன் முகவரிகளில்
மென்மையுந்தண்மையும்
என்றும் ஒளிவீச
கண்டவென் மனச்சுவர்களோ
வண்ணக்கலவைகளை
வாரிப்பூசிக்கொண்டது.
கரையாத ஆற்றுப்படுகையின்
பாறைக்குவியல்களில்
உன் அன்பு நீரூற்றுதழுவியதால்
அவை பனிப்பாறையாய் உருமாறின.
கிடைத்தற்கரிய அன்பு புதையலை
காவல்காத்து உரிமைக்கொண்டாட
கதவுகளையடைக்கவியலாமல்
காற்றுடனோர் ஒப்பந்தபடிவம்
கையெழுத்திடக்காத்திருக்கிறேன்
No comments:
Post a Comment