Saturday 19 July 2014

அதிரூபசுந்தரி















கனவுலகையும் கடந்த உலகில்
கற்பனைகளைத் தாண்டிய ருவம் கொண்டு
சிந்தனையிலுதிக்கா அன்பினாழம் பெற்று
விந்தையிலுமடங்கா விசித்திரமாய்
எங்கணும் காணா அதிரூபசுந்தரியாய்
என்னுயிர் கொண்டவள்

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழுலகும் தாண்டி
கடலினடியில் தனதுயிரை மறைத்த
மயில் ராவணாய்

தேவ கன்னியர்
பூலோக பேரழகு மாந்தர்
காப்பிய, காவிய நாயகிகள்
அனைவரையும் தாண்டி
எனதுயிரைக் கைப்பற்றி
தன்னுள் பதுக்கிய தேவதையை

பின்னெப்படிச் சொல்வதாம்?

No comments:

Post a Comment