கனவுலகையும் கடந்த உலகில்
கற்பனைகளைத் தாண்டிய உருவம் கொண்டு
சிந்தனையிலுதிக்கா
அன்பினாழம் பெற்று
விந்தையிலுமடங்கா
விசித்திரமாய்
எங்கணும் காணா அதிரூபசுந்தரியாய்
என்னுயிர் கொண்டவள்
ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழுலகும் தாண்டி
கடலினடியில் தனதுயிரை
மறைத்த
மயில் ராவணாய்
தேவ கன்னியர்
பூலோக பேரழகு மாந்தர்
காப்பிய, காவிய நாயகிகள்
அனைவரையும் தாண்டி
எனதுயிரைக் கைப்பற்றி
தன்னுள் பதுக்கிய
தேவதையை
பின்னெப்படிச்
சொல்வதாம்?
No comments:
Post a Comment