Monday 14 July 2014

விழியசைவில்

















உலர்ந்த செடியின் வாசம்
உள்ளிருப்பு போராட்டமாய்
நாசித் துளைகளை
குமுறச் செய்தது.

உருட்டிய சோழிகளில்
ஒன்று சிதறி
கணக்கை தவற செய்தது.

காலைப் பொழுதினில்
சுடுங்கதிரவனின் கதிர்
மனத் தளர்வை தந்தது.

தளும்பிய நீர்குடம்
சுமந்த தேவதையின்
இடைவாசம் இழந்தது.

இருந்தும் என் மனம்
உன் விழியசைவில்
வான்வெளியின்

சங்கீதத்தில் இணைந்தது..

No comments:

Post a Comment