உலர்ந்த செடியின் வாசம்
உள்ளிருப்பு போராட்டமாய்
நாசித் துளைகளை
குமுறச் செய்தது.
உருட்டிய சோழிகளில்
ஒன்று சிதறி
கணக்கை தவற செய்தது.
காலைப் பொழுதினில்
சுடுங்கதிரவனின் கதிர்
மனத் தளர்வை தந்தது.
தளும்பிய நீர்குடம்
சுமந்த தேவதையின்
இடைவாசம் இழந்தது.
இருந்தும் என் மனம்
உன் விழியசைவில்
வான்வெளியின்
சங்கீதத்தில் இணைந்தது..
No comments:
Post a Comment