Tuesday 15 July 2014

நீ எனது நான் உனது


 விழியுனது செயலெனது
உயிருனது புலனெனது
மொழியுனது சுவையெனது
வினாயெனது விடையுனது

மனமெனது உணர்வுனது
செயலுனது பிழையெனது
ஜெயமுனது மகிழ்வெனது
விதையுனது விளைவெனது

கடலுனது அலையெனது
பிறையெனது முழுநிலவுனது
கவியுனது கருயெனது
வரியுனது கருத்தெனது

வரமெனது வாழ்வுனது
ஸ்வரமுனது லயமெனது
சுதியுனது ஜதியெனது
நதியுனது கரையெனது

இதழுனது மதுயெனது
கொடியுனது கிளையெனது
மலருனது மணமெனது
காற்றுனது அசைவெனது

மழையெனது வளமுனது
கதிரெனது விடியலுனது
வானுனது வானவில்லெனது
நிலவுனது ஒளியெனது

பனியுனது குளிரெனது
விரலுனது ஸ்பரிசமெனது
உயிரெனது
உணர்வும் நினைவும் உனதே உனதே!

No comments:

Post a Comment