விழியுனது செயலெனது
உயிருனது புலனெனது
மொழியுனது
சுவையெனது
வினாயெனது
விடையுனது
மனமெனது உணர்வுனது
செயலுனது பிழையெனது
ஜெயமுனது
மகிழ்வெனது
விதையுனது
விளைவெனது
கடலுனது அலையெனது
பிறையெனது
முழுநிலவுனது
கவியுனது கருயெனது
வரியுனது கருத்தெனது
வரமெனது வாழ்வுனது
ஸ்வரமுனது லயமெனது
சுதியுனது
ஜதியெனது
நதியுனது கரையெனது
இதழுனது மதுயெனது
கொடியுனது கிளையெனது
மலருனது மணமெனது
காற்றுனது
அசைவெனது
மழையெனது வளமுனது
கதிரெனது விடியலுனது
வானுனது வானவில்லெனது
நிலவுனது ஒளியெனது
பனியுனது குளிரெனது
விரலுனது ஸ்பரிசமெனது
உயிரெனது
உணர்வும் நினைவும்
உனதே உனதே!
No comments:
Post a Comment