மன்னவன் மார்பினில் பூத்தனள்
மார்கழி வெண்பனி போன்றவள்
தென்னவன் கைவிரல் தீண்டையில்
தென்றலின் ஸ்பரிசமாய் சிலிர்ப்பவள்
கண்களில் அபிநயம் கொண்டவள்
காதலில் சுகலய மானவள்
என்னுயிர் அவளென சொன்னதும்
தன்னுயிர் கொண்டெனை காத்தனள்.
பெண்மையின் உயர்திணை யானவள்
பெருமை சீர் தமிழினை யாள்பவள்
மென்மையும் திண்மையும் அவளுரு
மேவிட தன்னையே ஈன்றனள்
No comments:
Post a Comment