Friday 18 July 2014

தன்னையே ஈன்றனள்

மன்னவன் மார்பினில் பூத்தனள்
மார்கழி வெண்பனி போன்றவள்
தென்னவன் கைவிரல் தீண்டையில்
தென்றலின் ஸ்பரிசமாய் சிலிர்ப்பவள்

கண்களில் அபிநயம் கொண்டவள்
காதலில் சுகலய மானவள்
என்னுயிர் அவளென சொன்னதும்
தன்னுயிர் கொண்டெனை காத்தனள்.

பெண்மையின் உயர்திணை யானவள்
பெருமை சீர் தமிழினை யாள்பவள்
மென்மையும் திண்மையும் அவளுரு
மேவிட தன்னையே ஈன்றனள்

No comments:

Post a Comment