இதழ்களும் சுடும் இதய ஜ்வாலை
கொண்டெனைத் தீண்டினும்
இமை வழி கொடிய அம்பினைக்
கொண்டெனைச் சாய்ப்பினும்
வதம் செயும் மனம் பெற்றவளாய்
உயிர் பருகினும்
வலிதரும் வாழ்க்கையில் எனைக்
கொண்டுச் சேர்ப்பினும்
மனையென கடிமணம் புரிந்து
எனில் வரிந்திட
மகிழ்ச்சியில் மனவெளியெலாம்
புத்தொளி பரவுதே!
No comments:
Post a Comment